கரவெட்டியில் குப்பை கொட்டும் இடத்தில் டயர்கள் போடட்டெரிப்பு, வாகனம் தடுத்து வைப்பு
இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குரிய கழிவுகள் கொட்டும் உப்பு ரோட்டில் அமைந்திருக்கும் கழிவு கொட்டும் இடத்தில், சாவகச்சேரி பகுதியில் இருந்து லாரி ஒன்றில் டயர்களை ஏற்றி வந்து கழிவுகள் கொட்டும் இடத்தில் கொட்டி நெருப்பு வைத்து எரித்துள்ளார்கள். எரிந்து முடிந்ததும் டயரில் உள்ள கம்பிகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுதுபிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு நெல்லியடி போலீசாருடன் தொடர்புகொண்டு போலீசாரும் சம்பவ இடத்துக்கு வருகைதந்து அவர்களை கைது செய்து பின்னர் போலீஸ் பினையில் விடப்பட்டு உள்ளார்கள். அவர்கள் வந்த வாகனம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.