Thu. May 16th, 2024

யாழ் மாவட்டத்தில் 135,113 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் வதியும் 135,113 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்  க. மகேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் முதற்கட்டமாக 135,113 குடும்பங்களிற்கு 5000 ரூபா உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவித்தொகை 76,032 சமுர்த்தி பயனாளிகள், 11,000சமுர்த்தி உதவி பெற காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், 39,473 தொழிலற்றவர்கள் மற்றும் 8,608 மேன்முறையீடுகள் மூலம் இணைக்கப்பட்டோர் உள்ள குடும்பத்தினர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக உதவித்தொகை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட  உதவித் தொகை நேற்று (18.5.2020)தொடக்கம் எதிர்வரும் 29 ஆம்  திகதி வரை  பிரதேச செயலங்கள் ஊடாக வழங்கப்படுமென  குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்