கரத்தில் ஈ.டிசாந்தி வெண்கலப் பதக்கம்
33வது தேசிய மட்ட இளைஞர் மாவட்ட அணிகளுக்கிடையிலான பெண்களுக்கான கரம் ஒற்றையர் ஆட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் பெண்கள் அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
33வது தேசிய மட்ட இளைஞர் மாவட்ட அணிகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான கரம் தொடர் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் இன்றும், நேற்றும், நடைபெற்றது.
இதில் வெண்கலப் பதக்கத்திற்கான பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து கேகாலை மாவட்ட இளைஞர் அணி மோதியது. இதில் யாழ் மாவட்ட இளைஞர் அணி வீராங்கனை 25:0, 25:0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. யாழ் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஈ.டிசாந்தி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.