Sun. May 19th, 2024

கரணவாயில் இராணுவத்தினரால் வீடு கையளிப்பு

“தலைக்கீழ் நிழல்” வீட்டுத் திட்டத்தில் இராணுவத்தினரால் வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
வடமராட்சி ஜெ/358 கிராம சேவகர் பிரிவில் உடுப்பிட்டி கண்ணாமலை இமையாணன் பகுதியில் கணவனை இழந்து சிறு பிள்ளையுடன் நிரந்தர வீடு இன்றி வாழ்ந்து வந்த ஒருவருக்கே இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க பாலத்தினை மேலும் உறுதிபடச் செய்யும் முகமாக இலங்கை இராணுவத் தளபதியினால் வீடு அற்றவர்களுக்கான வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில்
யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் கொடித் துவக்க எண்ணக்கருவிற்கு அமைவாக
55வது படைப்பிரிவின் சேனாதிபதி மற்றும் 551 படைத் தளபதி பிரிகேடியர் சீந்தன விக்கிரம சிங்க ஆகியோரின் வழிகாட்டுதலின்படி
4வது சிங்க படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் நிரோஜன் தவுத்துகல அமைக்கப்பட்ட இவ் வீடானது வீட்டின் உரிமையாளர் செல்வச்சந்நிதி தர்சினி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்