கபடியில் பார்வையாளர்களாலேயே குழப்பம்
கபடி போட்டியில் குழப்பம் விளைவித்த ஒருவரை கிளிநொச்சி பொலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டி கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து பாலிநகர் மகா வித்தியாலய அணி மோதியது.
இதில் இறுதி 30 செக்கன்கள் இருக்கும் போது பாலிநகர் மகா வித்தியாலய வீரரைப் பிடிக்கும் போது அவர் மைதானத்திற்கு வெளியே பார்வையாளராக நின்ற ஒருவரின் மீது விழுந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பார்வையாளர் கையில் இருந்த தலைக்கவசத்தால் குறித்த வீரரைத் தாக்கியுள்ளார். இதனால் குறித்த இடத்தில் பல்வேறுபட்டவர்களிடையே கைகலப்பாக மாறியது. சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 8 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி ஒருவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இரு பாடசாலை வீரர்களும் காரணமில்லை எனவும் பார்வையாளரின் குழப்ப நிலையே குழப்பத்திற்கான காரணம் எனவும் குறித்த பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். (