கனடா அல்வாய் நடுவம் மைக்கல் நேசக்கரத்தினூடாக உதவி
மைக்கலின் நேசக்கரம் ஊடாக கனடா அல்வாய் நடுவத்தின் அணுசரனையில் ”கொரோனா நிவாரணப்பணிகள் “ இன்று வழங்கி வைக்கப்பட்டது
கனடா அல்வாய் நடுவம் கொரோனா நிவாரணப்பணிகளுகாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான முதல் கட்டமாக ரூபா 200,000 நிதியை வழங்கியிருந்தனர்
அதற்கு அமைவாக தினக்கூலி குடும்பங்களை தெரிவு செய்து ஒரு குடும்பத்திற்கு ரூபா 2000 வழங்கி வைக்குமாறு கோரியிருந்தனர்
அதற்கு அமைவாக இன்றைய தினமும் ஒரு தொகுதி மக்களுக்கான கனடா அல்வாய் நடுவத்தின் “கொரோனா நிவாரணப்பணிகள் “மைக்கலின் நேசக்கரம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது