ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் ஒரு தொழிற்ச்சாலை -சஜித் அள்ளியெறியும் வாக்குறுதிகள்
புதிய ஜனநாயக முன்னணியின் (என்.டி.எஃப்) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தந்தை ரணசிங்க பிரேமதாசாவின் கைதொழில்மயமாக்கல்கொள்கையின் பாரியளவில் விரிவாக்கப்பட்ட திட்டத்தை அறிமுகப்படுத்த போவதாக தெரணியகலவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூடத்தில் தெரிவித்தார். நன் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும் ஒரு தொழிற்சாலையை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
எனது தந்தையின் 200 ஆடை தொழிற்சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாலிபன் கார்மென்ட்ஸ் தொழிற்சாலையை கடந்தே இப்போது வந்தேன் .இந்த திட்டத்தின் மூலம் 3,000 க்கும் மேற்பட்டோர் இந்த பயனடைகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். எனது தந்தை அறிமுகப்படுத்தியதை ஒப்பிடும்போது ஒரு விரிவான தொழில்மயமாக்கல் திட்டத்தைத் தொடங்க நான் உறுதியளிக்கிறேன் என்று அமைச்சர் பிரேமதாச தெரிவித்தார்