Wed. May 15th, 2024

முக்கி எடுத்த பத்திரிகையாளர்கள், திணறிய கோத்தபாய ராஜபக்ச -ஷங்கரிலா ஹோட்டலில் சம்பவம்

நேற்றைய தினம் கோத்தபாய ராஜபக்ச பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை ஷங்கரில ஹோட்டலில் நடத்தி இருந்தார். இதன் பொழுது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வியால் கோத்தபாய ராஜபக்ச திக்கு முக்காடிபோனதக தகவல்கள் வெளிவருகின்றன.இந்த சந்திப்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர்.  காணாமல் போனவர்கள் தொடர்பான கேள்வி ஒன்றின் பொழுது தான் ராணுவத்தை வழிநடத்தவில்லை அது ராணுவ தளபதியே என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் ஐக்கிய நடுகள் மனித உரிமைகள் சபையுடன் செய்யும் உடன்படிக்கை சட்ட ரீதி அற்றது என்றும் கூறியுள்ளார். இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிட்ட கருத்தின் படி , முன்னைய அரசாங்கம் செய்த சகல ஒப்பந்தங்களையும் , கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கவனத்தில் கொள்ளாது என்றும் கூறியுள்ளார்
மேலும் இவரிடம் வைக்கப்பட்ட பலகேள்விகளுக்கு மஹிந்த ராஜபக்சவே முன்வந்து பதிலளித்து கோத்தபாயவை காப்பாற்றி உள்ளார்.

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்