ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு
யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப் பகுதி மக்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மயிலங்காடு பகுதியில் வசிக்கும் மோட்டார் சைக்கிள் தரகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.