ஏழாலையில் எறிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பாக மேலதிக தகவல்கள்
ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் இருந்த சடலம் செட்டி என அழைக்கப்படும் 82 வயதுடைய வயோதிபர் ஒருவருடையது என தெரியவருகிறது. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள் என்றும் இவர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தவர் எனவும் தெரியவருகிறது. தற்பொழுது சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்
முன்னைய செய்தி
யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப் பகுதி மக்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மயிலங்காடு பகுதியில் வசிக்கும் மோட்டார் சைக்கிள் தரகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.