இலங்கையில் கடந்த 15 மணி நேரத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் கடந்த 15 மணி நேரத்தில் 40 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது.
இறுதியாக கண்டறியப்பட்ட 40 பேரில் 20 கடற்படை வீரர்கள், கடற்படை வீரர்களின் உறவினர்கள் நால்வர் மற்றும் தனிமை மையத்தில் உள்ள (பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த) 16 பேரும் அடங்குகின்றனர்.