Mon. May 20th, 2024

எழுதுமட்டுவாழில் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் பலி

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜே 334 எழுதுமட்டுவாழ் வடக்கு
கிராம அலுவலர் பிரிவில் மன்னன் குறிச்சி கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் 3/5/2020 ஞாயிற்றுக்கிழமை  இரவு 7.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவர் மரணம் அடைந்தார்

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டில் முடிந்தமையால் ஒருவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலதிக விபரம்

மிருசுவில் மன்னன் குறிச்சி  பகுதியில் 3/5/2020 ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாழ் வெட்டில்
தர்மகுலசிங்கம் கிருபாகரன் வயது 40 தர்மகுலசிங்கம் விஜயகுமார் வயது 30 தர்மகுலசிங்கம் சிந்துஜன் வயது 27 சிவகுமார் சுஜிதா வயது 27 ஆகியோரே காயமடைந்தவர்களாவர்

தர்மகுலசிங்கம் கிருபாகரன் வயது 40 தர்மகுலசிங்கம் விஜயகுமார் வயது 30 ஆகியோர் சாவகச்சேரி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

தர்மகுலசிங்கம் சிந்துஜன் வயது 27 இறந்தவரின் மனைவியான சிவகுமார் சுஜிதா வயது 27
ஆகியோர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வாள் வெட்டில் மரணமடைந்த 40 வயதுடைய இராசக்கோன் சிவகுமார்  என்பவரின் சடலம்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்