33 குற்றங்களுடன் தொடர்பற்ற கைதிகளுக்கு சலுகை
தண்டனை சட்டக்கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள 33 குற்றங்களுடன் தொடர்புபடாத கைதிகளுக்கு சலுகைகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, 33 குற்றங்களுக்குள் இல்லாத 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி வரை அபராதப் பணம் செலுத்த முடியாத குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளையும் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.