ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி தோட்ட காணிகளில் கழிவுகள் கொட்டல்
ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் கழிவுப் பொருட்கள்,ரசாயனப் பொருட்கள், பம்பஸ் போன்ற கழிவுப் பொருட்களை 750 வீதியில் அமைந்துள்ள நாவலர் மடத்துக்கும் கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள தோட்டக் காணிகளில் கொண்டு வந்து கொட்டி செல்வதனால் விவசாயம் செய்யும் விவசாயிகள் சுகாதார சீர்கேடுகளை சந்திக்கவேண்டியுள்ளது. பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து தோட்டம் செய்யும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல்சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்கிறார்கள்.