ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில், செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கல அறிவித்துள்ளார். அத்துடன் மக்கள் பலரும் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.