Fri. May 17th, 2024

உழவு இயந்திர விபத்தில் இளைஞன் பலி

உழுவு இயந்திர விபத்தில்  இளைஞர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் அனலைதீவு பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் சிவதர்சன்  (வயது  25 ) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அனலைதீவில் நேற்று  புதன்கிழமை மாலை  5:00மணியளவில்   உழவு இயந்திரத்திரத்தை செலுத்தியவேளை மதகு சீமெந்து கட்டிடத்தில் மோதுண்ட போது அவர் தூக்கி வீசிய நிலையில் உயிரிழந்துள்ளார்
சடலம் உடல் கூற்று சோதனைக்காக  யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை  அனலைதீவு பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்