உழவு இயந்திர விபத்தில் இளைஞன் பலி
உழுவு இயந்திர விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் அனலைதீவு பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் சிவதர்சன் (வயது 25 ) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அனலைதீவில் நேற்று புதன்கிழமை மாலை 5:00மணியளவில் உழவு இயந்திரத்திரத்தை செலுத்தியவேளை மதகு சீமெந்து கட்டிடத்தில் மோதுண்ட போது அவர் தூக்கி வீசிய நிலையில் உயிரிழந்துள்ளார்
சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.