உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
புரேவி புயலால் பாதிக்கப்பட்ட நலன்புரி முகாமில் காக்கைதீவு கிராமத்தை சேர்ந்த 67 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. யா/உயரப்புலம் மெதடிஸ் மிசன் வித்தியாலய ஆசிரியர் ம. சயந்தறூபன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸ்லாந்தைச் சேர்ந்த வலுவிழந்தோரை தாங்குவோம் அமைப்பினால் வழங்கப்பட்டது. இவ்வமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி பொ. சண்முகசுந்தரம் அவர்களினால் புரோவி புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாமில் தங்கியிருந்த காக்கைதீவு கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.