நெல்லியடியில் 15 வயது சிறுமி கர்ப்பம், காதலரான உறவினரை தேடி பொலிஸ் வலைவீச்சு
வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமுற்று உள்ளார். சிறுமியினுடைய இரத்த உறவினர் மைத்துனர் உடன் காதல் தொடர்பு வைத்ததனால் இது இடம்பெற்றதாக தெரியவருகிறது. இத்தொடர்பு வீட்டாருக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் சுகயீனம் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மூலம் கர்ப்பம் தரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பரிசோதனை அறிக்கை நெல்லியடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் காதலரான மைத்துனரை நெல்லியடி பொலிசார் தற்போது தேடி வருகிறார்கள். அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளார் என தெரியவருகின்றது.