Mon. May 20th, 2024

உடுவிலில் அதிகாலை 15 பவுண் நகை 5லட்சம் பணம் கொள்ளை

யாழ்.உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளது. இத் தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபத் தம்பதியினரின் 3 பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவர்கள் இருவரும் அங்கு வசித்திருந்துள்ளனர். இது தொடர்பில் தெரிவித்த அவர்கள்,

இன்று (5/5) அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், எங்களைக் கட்டி வைத்தது. கணவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கினர். எனது கன்னத்தில் அறைந்து. அதனால் நாம் நிலை குலைந்தோம்.

சுமார் 3 மணிநேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு கும்பல் தப்பித்தது” என்று குடும்பப் பெண் விசாரணையில் தெரிவித்தார்.

“கொள்ளையர்கள் மூவரும் 20 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களாதான் இருக்கும். அவர்களில் ஒருவன் கைகளில் கையுறை போட்டிருந்தான்.

வீட்டில் பிள்ளைகளின் நகைகளுடன் 15 பவுண் நகைகள் இருந்தன. 5 லட்சம் ரூபாய் பணமும் இருந்தது. அவை கொள்ளையிடப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மோப்ப நாய் அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்