இலங்கையில் 2019 ஆம் ஆண்டிலேயே அதிக யானைகள்இறந்துள்ளன
இலங்கையின் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான யானை இறப்புகள் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல்வேறு காரணங்களால் 361 யானைகள் உயிரிழந்துள்ளதாக இந்த நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர கரியவாசம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி வேலைத்திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று கரியவாசம் மேலும் கூறினார்.