தொழில் பெற்று தருவதாக மோசடி செய்த பெண் கைது
வியட்நாமில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா மோசடியில் ஈடுபட்ட ஹொரவபொதான பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஹொரவபொதான காவல்துறையினருக்கு கிடைத்த பல முறைப்பாடுகளை தொடர்ந்து , குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த மோசடிக்கு உடந்தையாக செயற்பட்ட வெளிநாட்டிலுள்ள அவரது கணவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்