“இலக்கை நோக்கிப் பயணிப்போம் ” நூல் வெளியீடு
அருட்பணி இராசநாயகம் ஜினோல்ரன் விஜின்ரஸ் அடிகளாரின் “இலக்கை நோக்கிப் பயணிப்போம்” மாணவர்களுக்கான விழிப்புணர்வு நூல் வெளியீடு விழா நாளை வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கரவெட்டி திருஇருதயக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யா/திரு இருதயக் கல்லூரி அதிபர் க.சிறீஸ்குமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் பி.ஞானப்பிரகாசம், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்கலாநிதி ப.யோ.ஜெபரட்ணம், வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன், கெளரவ விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோரும் நால் மதிப்பீட்டுரையை யாழ் பல்கலைக்கழக கல்வியியற்துறைத் தலைவர் கலாநிதி திருமதி ஜெயலச்சுமி இராசநாயகம் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.