Sun. May 12th, 2024

இறுதி ஆட்டமும் பரிசளிப்பு விழாவும்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக் மறைந்த நடுவர்கள் ஞாபகார்த்தமாக அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை நாமகள் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பிற்பகல் 2.30 மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில்
சென்நீக்கிலஸ் அணியை எதிர்த்து  விண்மீன் அணியும்
பிற்பகல் 3.30  மணிக்கு
40வயதிற்கு மேற்பட்டோருக்கான இறுதியாட்டத்தில் சென்லூட்ஸ் அணியை எதிர்த்து    வட்டுக்கோட்டை அணியும்
பிற்பகல் 4.30 மணிக்கு நாவாந்துறை சென்மேரிஸ் அணியை எதிர்த்து இளவாலை யங்கென்றீஸ் அணியும் மோதவுள்ளன.
வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இ.யுகராஜ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர், சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ, வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், தெல்லிப்பளை பொலீஸ் பெறுப்பதிகாரி,  நாமகள் சன சமூக நிலையத்தின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்