Wed. May 15th, 2024

இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இன்று ஞாயிற்றுக்கிழமை வடமாகாணத்தில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதில் யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் மூவருக்கும்,  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவருக்கும்,  சாவகச்சேரி,  ஊர்காவற்துறை,  சங்கானை, மானிப்பாய் ஆகிய வைத்தியசாலைகளில் தலா ஒவ்வொருவருக்கும் என 9 பேருக்கும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் காமன்ஸ் தொழிற்சாலையுடன் தொடர்புடைய புதுக்குடியிருப்பு சுகாதார பிரிவில் 12 பேருக்கும்,  புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 8 பேருக்கும் என 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி வைத்தியசாலையில் 4 பேருக்கும்,  பளை வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  கரைச்சி சுகாதார பிரிவில் 3 பேருக்கும் என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட த்தில் மன்னார் வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார ஊழியர் ஒருவருக்கும், மன்னார் சுகாதார பிரிவில் 6 பேருக்கும் என 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் இருவருக்கும்,  பூவரசங்குளம் சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  வவுனியா தெற்கு சுகாதார பிரிவில் 7 பேருக்கும்,  வவுனியா வடக்கு சுகாதார பிரிவில் ஒருவருக்கும் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்