Sun. May 19th, 2024

இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் இன்று மேலும் 15  பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ் மருத்துவபீட ஆய்வுகூட பரிசோதனையில் 8 பேருக்கும் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 2 பேருக்கும், கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் பராமரிக்க வந்த 4 பேருக்கும், யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட ஒருவருக்கு என 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர் 100 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சங்கானையை சேர்ந்த 4 பேர், உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய், வடலியடைப்பு பகுதியை சேர்ந்த தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல்.இன்று யாழ் போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில் 402  பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன.  ஏழாலையைச் சேர்ந்த 2  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கோப்பாய் சிகிச்சை நிலையத்தில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களோடு பராமரிக்க வந்திருக்கும் உறவினர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சோதனைக் உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்