இதுவரை 1000 குழந்தைகளுக்கு மேல் கோரோனோ தொற்று , 5 குழந்தைகள் மரணம்
COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 1,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழந்தை மருத்துவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
குழந்தைகளைப் பாதுகாக்க தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம் என்று குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை (எல்.ஆர்.எச்) ஆலோசகர் குழந்தை மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்
வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த கட்டத்தில், இது குழந்தைகள் மத்தியில் மிக எளிதாக பரவக்கூடும். எனவே, தடுப்பூசி போடுவதற்கு தகுந்த மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் அவை விலைமதிப்பற்றவை, மேலும் அவை நம் நாட்டின் எதிர்காலம் என்று மருத்துவர் கூறினார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்பினால், அவர்கள் மனதில் கொள்ள வேண்டிய விடயம் என்னெவென்றால் , அவர்கள் வைரஸை வீட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வைரஸ் காரணமாக ஐந்து குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர்,” என்றும் அவர் கூறினார்.