ஆவரங்கால் இந்து இளைஞர் அணி மகுடம் சூடியது
டயலொக் கிண்ணத்தை ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண அணிகளுக்கிடையிலான ஆண்களுக்கான கரப்பந்தாட்டத் தொடரில் ஏக ஆதிக்கம் செலுத்தி ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
இதன் இறுதியாட்டம் இன்று புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து ஆவரங்கால் மத்தி அணி மோதியது. 5 செற்கள் கொண்ட போட்டியில் முதலாவது செற்றில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 29:27 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடர்ந்த இரு செற்களிலும் 25:23, 25:19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 3:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.