ஆழ்கடல் நடவடிக்கையில் 7 இரானியர்களுடன் 260 கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் மீட்பு
இலங்கை கடற்படை 300 கிலோவுக்கு மேற்பட்ட போதைப்பொருட்களை ஆழ்கடலில் நடத்திய நடவடிக்கையின் போது கைப்பற்றியுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 260 கிலோ ஹெராயின் மற்றும் 56 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (‘ஐஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது) என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை கடற்கரையிலிருந்து 548 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடலில் கொடி இல்லாத வெளிநாட்டுக் கப்பலில் போதைப்பொருள்களை கடற்படையினர் கண்டுபிடித்தனர்.
ஈரானியர்கள் என சந்தேகிக்கப்படும் ஏழு வெளிநாட்டினரும் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் சோதனை இந்த ஆண்டு தொடக்கத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மூன்று கப்பல்களில் இருந்த நபர்களை விசாரிப்பதில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடற்படை மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாகும். மேலும் சர்வதேச தகவல் பரிமாற்றம், செயற்கைக்கோள் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டது ..
இந்த போதைப் பொருள் சுமார் 3,270 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கடற்படை 687 கிலோ ஹெராயின், 795 ‘ஐஸ்’ மற்றும் 579 கிலோ கெட்டமைன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.