அல்வாய் வீதியில் முதியவரின் சடலம்
அல்வாய் வியாபாரிமூலை சக்கோட்டை தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள வீதியில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
அல்வாய் வடமத்தி ஜே/398 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சேதுராமலிங்கம் (வயது 81) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து புறப்பட்ட முதியவர் இன்று காலை குறித்த வீதியில்
சடலமாக கிடப்பதை ஊர் மக்களால் பொலீஸாருக்குத் தெரியப்படுதப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனையை மரண விசாரணை அதிகாரி சதாரட்ணம் சிவராஜா மேற்கொண்டு திடீரென நிலத்தில் விழுந்ததால் இறப்பு நடைபெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.