Tue. May 14th, 2024

அரச அதிகாரிகளுக்கு வலை விரிக்கும் மஹிந்த, அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடராத வகையில் சட்டத்திருத்தம்

நேர்மையாக செயற்படும் அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடராத வகையில் புதிய சட்டம் எதிர்வரும் அரசாங்கத்தினால் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் பொழுது அவர் இதனை தெரிவித்தார் .
கடந்தகாலத்தில் எமது ஆட்சியின் போது அரச அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்தோம். இதன்மூலம் அவர்கள் சுயாதீனமாக செயற்பட வழி வகுத்தது. எனினும் தற்போது அவ்வாறு இல்லை.அவர்கள் சுயாதீனமாக செயற்பட்டால் சிறை செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் . ஆகவே அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரமுடியாத வகையில் அரசியலமைப்பில் ஒரு திருத்தம் ஒன்றை தமது ஆட்சியின் ஊடாக கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்