Fri. May 17th, 2024

அனுமதியை மீறி கலந்து கொண்ட ஐயர், நாதஸ்வர வித்துவான்கள் சுயதனிமைப்படுத்தலில்

அனுமதியை மீறி திருமணத்தில் கலந்து கொண்ட சிவாச்சாரியார்  மற்றும் நாதஸ்வர வித்துவான்கள் என 4 பேர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று பருத்தித்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட பிரிவில் நடைபெற்றுள்ளது.
பதிவுத் திருமணத்திற்காக 15 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்த போது அதனை மீறி சிவாச்சாரியார் உட்பட வாத்திய இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு  கலாசார ரீதியான திருமணத்தை வெளி நபர்களுடன் நடாத்துவதாக பொதுமக்களிடமிருந்து  பொதுச் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதகர் நேரில் சென்று பார்வையிடப்பட்ட போது  அனுமதியை மதிக்காமல் அதிகமாக கலந்து கொண்ட சிவாச்சாரியார் மற்றும்  வாத்திய கலைஞர்களான மிருதங்கம் மற்றும் தவில் நாதஸ்வரம் போன்றவற்றை வாசிப்பவர்களும் உடனடியாக அவர்களது வீடுகளில் சுய தலைமை படுதலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கோவிட் கட்டுப்பாட்டை முன்னிட்டு திருமண பதிவாளர் உட்பட பதினைந்து பேரே வீட்டில் திருமணம் நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்