அதிசொகுசு பஸ் – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து!! -அதிகாலை மாங்குளத்தில் சம்பவம்-
மாங்குளம் ஏ-9 வீதியில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் தனியார் அதிசொகுசு பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதிசொகுசு பேருந்தும் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.
விபத்தின்போது டிப்பர் வாகனத்தில் பயணம் செய்த 2 பேர் காயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் பேருந்தில் மூன்று பேர் மாத்திரமே பயணித்த நிலையில் அவர்கள் எந்தவித காயங்களும் இல்லாமல் அதிஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.