Thu. May 16th, 2024

குளத்தில் மூழ்கிய 3 சிறுவர்கள்!! -ஒருவர் சடலமாக மீட்பு: இருவரை காணவில்லை-

மட்டக்களப்பு, ஆரையம்பதி திருநேற்றுக்கேணிப் பகுதியில் குளத்தில் மூழ்கி காணாமற்போன 3 சிறுவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரையும் தேடும் பணியில் அப்பகுதி மக்கள் முன்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் புதிதாகத் தோண்டப்பட்ட குளத்தில் இன்று திங்கட்கிழமை காலை விளையாடிக் கொண்டிருந்த சுமார் 11, 14 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் குளத்து நீரில் மூழ்கியுள்ளனர்.

அவர்களை தேடும் பணிகள் ஊர் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத் தேடுதலின் போது ஒரு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்