அதிகரிக்கும் கோரோனோ இழப்பு , நேற்று மட்டும் 38 பேர் மரணம்’
இலங்கையில் நேற்றைய தினம் 38 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1363 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இன்றைய தினம் 2845 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 177,711 ஆக உயர்ந்துள்ளது.