Sun. May 19th, 2024

அச்சுவேலி பகுதியில் சீமெந்து பைகள் திருட்டு, கட்டுப்படுத்துமாறு மக்கள் வேண்டுகோள்

அச்சுவேலி பகுதியில் திருத்த வேலைகள் நடைபெறும் இடங்களில் சீமெந்து பைகள் களவாடப்படுவதுடன் பொருட்கள் பல சேதமாகப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இன்றும் அச்சுவேலி வளலாய் கிழக்கு ஜெ/284 பிரிவில் வீட்டுத் திருத்த வேலைக்காக அமைக்கப்பட்ட தூண்கள் சேதமாக்கப்பட்டதுடன், 10 சீமெந்து பைகள் களவாடப்படுவதாகவும் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் திருத்தவேலை நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் முன்வீட்டில் மரண சடங்கு நடைபெற்ற காரணத்தால் வேலையை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்று மீளவும் வேலையை தொடருவதற்கு பார்வையிட்ட நிலையில் இரண்டு தூண்கள் சேதம் அடைந்த நிலையிலும் சீமேந்துபாக் 10 திருடப்பட்டும் உள்ளதாக வீட்டின் உரிமையாளரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான  சம்பவங்கள் அண்மைக் காலமாக இப்பகுதியில் திட்டமிட்டு இந்நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அச்சுவேலி பொலீஸார் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்