தேர்தல் சூடு..! அமைச்சர் பட்டாளத்துடன் வடக்கில் கடை விரித்திருக்கும் ரணில்..

வடக்கு மாகாணத்திற்கு இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது இரு மாவட்டங்களிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை தொடங்கிவைக்கவுள்ளார்.
வவுனியாவுக்கு வரும் பிரதமர் வவுனியா மருத்துவமனையில் இரண்டாவது சுகாதாரத் துறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட் டுக்கு கையளிக்கவுள்ளார்.
அத்துடன் நெதர்லாந்து அரசால் வழங்கப்படவுள்ளஇ இலகுக் கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல்லையும் நட வுள்ளார்.
இந்த நிகழ்வுகளில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின நெதர்லாந்துத் துணைத் தூதுவர் ஈவா வான் வோசம்இ வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வுள்ளனர்.
பிரதமர் வருவதையிட்டு வவுனியா மருத்துவனைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களின் தகவல்கள் மற்றும் அதன் உரிமையாளர் பணிபுரிபவர்களது தகவல்கள் பெறும் நடவடிக்கை நேற்று சிவில் உடை தரித்த பொலிசாரால் மேற்கொள்ள பட்டிருந்தன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை யாழ்ப்பாணத்துக்கும் வரவுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வரும் அவர் யாழ்ப்பாணத்திலும் பல அபிவிருத்தித் திட்டங் களை ஆரம்பிக்கவுள்ளார்.
வீட்டுத் திட்டங்களைக் கையளிக்கும் அவர் மயிலிட்டியில் அமைக்கப்பட்ட துறைமுகத்தைத் மக்களுடைய பாவ னைக்குக் கையளிப்பார். இந்திய நிதியுதவில் அமைக்கப் பட்டுவரும் யாழ்ப்பாணக் கலாசார மண்டபத்தின் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.