Thu. Mar 28th, 2024

தேர்தல் சூடு..! அமைச்சர் பட்டாளத்துடன் வடக்கில் கடை விரித்திருக்கும் ரணில்..

வடக்கு மாகாணத்திற்கு இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது இரு மாவட்டங்களிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை தொடங்கிவைக்கவுள்ளார்.

வவு­னி­யா­வுக்கு வரும் பிரதமர் வவு­னியா மருத்­து­வ­மனை­யில் இரண்­டா­வது சுகா­தா­ரத் துறை மேம்­ப­டுத்­தல்  அபி­வி­ருத்தி திட்­டத்­தின்கீழ் உரு­வாக்­கப்­பட்ட விபத்து மற்­றும் அவ­சர சிகிச்­சைப் பிரிவை மக்­கள் பயன்­பாட்­ டுக்கு கைய­ளிக்­க­வுள்­ளார்.

அத்­து­டன் நெதர்­லாந்து அர­சால் வழங்­கப்­ப­ட­வுள்ளஇ இல­குக் கடன் உத­வி­யில் அமைக்­கப்­ப­ட­வுள்ள இரு­தய மற்­றும் சிறு­நீ­ரக சிகிச்சை பிரி­வுக்­கான அடிக்­கல்­லை­யும் நட­ வுள்­ளார்.

இந்த நிகழ்­வு­க­ளில் சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்­தின நெதர்­லாந்­துத் துணைத் தூது­வர் ஈவா வான்­ வோ­சம்இ வடக்கு மாகாண ஆளு­னர் சுரேன் ராக­வன் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கலந்து கொள்­ள­ வுள்­ள­னர்.

பிரதமர் வரு­வ­தை­யிட்டு வவு­னியா மருத்­து­வ­னைக்கு அரு­கில் உள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளின் தக­வல்­கள் மற்­றும் அதன் உரி­மை­யா­ளர் பணி­பு­ரி­ப­வர்­க­ளது தக­வல்­கள் பெறும் நட­வ­டிக்கை நேற்று சிவில் உடை தரித்த பொலி­சா­ரால் மேற்­கொள்ள பட்­டி­ருந்­தன.

பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை யாழ்ப்­பா­ணத்­துக்­கும் வர­வுள்­ளார். யாழ்ப்­பா­ணத்­துக்கு வரும் அவர் யாழ்ப்­பா­ணத்­தி­லும் பல அபி­வி­ருத்­தித் திட்­டங்­ களை ஆரம்­பிக்­க­வுள்­ளார்.

வீட்­டுத் திட்­டங்­க­ளைக் கைய­ளிக்­கும் அவர் மயி­லிட்­டி­யில் அமைக்­கப்­பட்ட துறை­மு­கத்­தைத் மக்­க­ளு­டைய பாவ­ னைக்­குக் கைய­ளிப்­பார். இந்­திய நிதி­யு­த­வில் அமைக்­கப்­ பட்­டு­வ­ரும் யாழ்ப்­பா­ணக் கலா­சார மண்­ட­பத்­தின் கட்­டு­மா­னப் பணி­க­ளை­யும் அவர் பார்­வை­யி­டு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்