கரவெட்டி பாதீடு நிறைவேற்றம்
கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை பாதீடு சபைக்கு வருகை தந்த உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பாதீடு நிறைவேற்றம் பெற்றுள்ளது.
கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை பாதீடு தவிசாளர் ஐங்கரன் அவர்களால் வாசிக்கப்பட்டது. இதனை சபைக்கு வருகை தந்த உறுப்பினர்கள் 27 பேரும் ஒன்றாக இணைந்து பாதீட்டை ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
31 பேரைக் கொண்ட சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவரும் சபைக்கு சமூகமளிக்கவில்லை.