Tue. May 21st, 2024

பொலிஸ் பாதுகாப்பு கோரி சிவாஜிலிங்கம் முறைப்பாடு

தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தனக்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரி எம் .கே சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இம்முறை இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

நிலையில் அவர் நேற்று புதன்கிழமை(09) இரவு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதாவது வாட்ஸ்அப்  ஊடாக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தனக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு கூறியே அவர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்