பேருவளையில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு மூடுவிழா , கோரோனோ பரவலை தடுக்க நடவடிக்கை
பேருவளையில் உள்ள இரண்டு கிராமங்கள் கோவிட் -19 க்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, பேருவளையில் உள்ள பன்விலா மற்றும் சீனா கோரட்டுவா கிராமங்கள் சீல் வைக்கப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக அறிவிப்பு வரும் வரை இந்த பகுதிகளிலிருந்து யாரும் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இராணுவத்தளபதி தெரிவித்தார்