Tue. May 21st, 2024

புதிய தேசிய பாடசாலை இடமாற்றங்கள் வலயக் கல்வி அலுவலகங்களாலேயே மேற்கொள்ளப்படும்

அண்மையில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு பெற்ற பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றங்கள் 3 வருடங்களுக்கு அந்தந்த கல்வி வலயங்களாலேயே மேற்கொள்ளப்படும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்தார் .

வடமாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட வலயக்  கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள் இடமாற்றங்கள் தொடர்பில் ஆசிரியர்களுக்கான தெளிவின்மை தொடர்பாக கேட்கப்பட்ட போதே அவர்  இவ்வாறு பதிலளித்தார்.
தற்போது வடமாகாணத்தில் பல பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு பெற்றுள்ளன. இவர்களுக்கான இடமாற்றங்கள் அந்தந்த கல்வி வலயங்களாலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்