நாளை தனியார் சேவை நடைபெறாது, இ.போ.ச. சேவைகள் வழமைபோல் இடம்பெறும்
நாளை இலங்கை போக்குவரத்து சேவை இடம்பெறுவதுடன் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலையிலிருந்து புறப்படும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து பருத்தித்துறை சாலை முகாமையாளர் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பருத்தித்துறையிலிருந்து புறப்படும் தனியார் சேவைகள் எதுவும் நாளை நடைபெறாது என பருத்தித்துறை தனியார் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் செயலாளர் மனோகரன் அறிவித்துள்ளார்.