கொரோனாவால் மருத்துவரும் உயிரிழப்பு
கொரோனா தொற்று காரணமாக வைத்தியர் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
கேகாலை- கலிகமுவ MOH அலுவலகத்தில் பணிபுரியும் மருத்துவரும் 2 பிள்ளைகளின் தந்தையுமான 54 வயதுடைய பத்மசாந்தா, என்பவரே கொரோனா தொற்று காரணமாக பேராதனை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்