கயஸ் வான் புகையிரத விபத்து 6 மாத குழந்தை உட்பட இருவர் பலி
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் ஆனந்தராசா சயந்தன் வயது 31, அவரது 6 மாத மகள் அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.