Sun. May 19th, 2024

நெல்லியடி பகுதியில் 14 வயதிற்குட்பட்ட சிறுவன் திருட்டு சம்பவத்தில் கைது

நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

கரவெட்டி இராஜ கிராமம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவனே பல இடங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் பாடசாலைக்குச் செல்லாமல் வதிரி மற்றும் சாமியர் அரசடி வீதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்