நாளை வழமைபோல் ஆசிரியர்கள் கடமையாற்றுங்கள் – ஜோசப் ஸ்டாலின்
நாளை திட்டமிட்டபடி பாடசாலைகள் கடமைகளை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆற்றுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் தொடர் போராட்டங்களில் குதிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது அரசினால் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து நாளை கொழும்பு கோட்டை பகுதியில் பிற்பகல் 4 மணிக்கு ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளோம். மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்தில் கொண்டு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடாது தமது கடமைகளை ஆற்றுமாறும், தமது கடமைகளை முடித்த பின்னர் அதிபர்கள்
ஆசிரியர்களை இப்போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.