பரிசு விழுந்ததாக ஏமாற்றப்பட்ட திக்கம் பகுதியை சேர்ந்த குடும்பம்
நேற்று முன்தினம் ஐந்து லட்சம் ரூபாய் பரிசு விழுந்ததாக தொலைபேசி மூலமாக அறிவித்து,உடனடியாக 55,000 ரூபாய் பணம் ஈஸி காசு மூலமாக அனுப்புமாறு தொலைபேசி மூலமாக. திக்கம் கிராமத்திலுள்ள வறுமைக் கோட்டில் உள்ள ஒரு குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அவர்கள் உடனடியாக நெல்லியடி நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் 55000 ரூபாவுக்கு அடகு வைத்து உடனடியாக 10,000 ருபா அனுப்பி உள்ளார்கள். அனுப்பி இரண்டு நிமிடங்களில் மிகுதியையும் போடுமாறு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தினார்கள். நெல்லியடியில் உள்ள போன் ஷாப் உரிமையாளர் உடனடியாக
ஏன் போடுகிறீர்கள் என்ன விஷயம் என கேள்விகள் கேட்டபோது தங்களுக்கு பரிசு விழுந்ததாக தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என்றும் பணம் அனுப்புவதற்கு வந்துள்ளோம் என கூறினார்கள். நீங்கள் நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள் என கூறி அவர்களை திருப்பி மிகுதி பணத்தை போடாமல் வீட்டுக்கு அனுப்பி உள்ளார். தொடர்ந்து பல குடும்பங்கள் தொலைபேசி அழைப்பினால் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது