Wed. May 15th, 2024

சட்ட விரோத மணல் கடத்தல் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம்

கொடிகாமம் – பாலாவி காட்டு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது  இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.  இதன்போது  கடத்தல்காரர்கள் தப்பி ஓடியுள்ளதுடன்  உழவு இயந்திரம் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில்   சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து குறித்த இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனால் உழவு இயந்திரத்தை விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர்.
சம்பவ இடத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்