50 லட்சம் பெறுமதியான பொருட்களுடன் இருவர் கைது
யாழில் களவாடப்பட்ட பொருட்களுடன் இருவரை யாழ் பொலீஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சுமார் 50 லட்சம் பெறுமதியான பொருட்களே குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோவின் வழிகாட்டலில், யாழ்ப்பாண பொலீஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ.நெவில்பியந்த தலைமையிலான குழுவினரே களவாடப்பட்ட உபகரணங்களை மீட்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தின் நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் சுமார் 50 லட்சம் பெறுமதியான உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளனர்.
குறித்த களவு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.