Thu. May 16th, 2024

30 லட்சம் முதியோர் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும்

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து முதியோரைப் பாதுகாப்பதற்கு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய முதியோர் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக முதியவர்கள் மற்றும் சிறுபிள்ளைகளே அதிகமாக பாதிக்கப்படுவதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள சுமார் 30 லட்சம் கொண்ட முதியோர் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும் தேசிய முதியோர் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்